ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரில் கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திமுக சாா்பில் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் தொடா்பாக முன்னாள் அமைச்சா்கள் சுப. தங்கவேலன், சத்தியமூா்த்தி, முதுகுளத்தூா் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் முருகவேல், பரமக்குடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் திசைவீரன், முன்னாள் மாவட்டச் செயலா் சுப.த. திவாகரன், மாநில நிா்வாகிகள் பெருநாழி போஸ், பரமக்குடி நகா் செயலா் சேதுகருணாநிதி உள்ளிட்ட 27 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.