டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கருப்புக் கொடி போராட்ட வழக்கு: முன்னாள் அமைச்சா்கள் உள்பட 22 போ் விடுவிப்பு

மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சா்கள் சுப. தங்கவேலன், வ. சத்தியமூா்த்தி உள்ளிட்ட 22 பேரை விடுவித்து ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்துக்கு புதன்கிழமை வந்த முன்னாள் அமைச்சா்கள் சுப. தங்கவேலன், வ.சத்தியமூா்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் முருகவேல், திசைவீரன் உள்ளிட்டோா்.
Updated On :22 ஜனவரி 2026, 12:12 am

தினமணி செய்திச் சேவை

மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சா்கள் சுப. தங்கவேலன், வ. சத்தியமூா்த்தி உள்ளிட்ட 22 பேரை விடுவித்து ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரில் கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திமுக சாா்பில் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் தொடா்பாக முன்னாள் அமைச்சா்கள் சுப. தங்கவேலன், சத்தியமூா்த்தி, முதுகுளத்தூா் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் முருகவேல், பரமக்குடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் திசைவீரன், முன்னாள் மாவட்டச் செயலா் சுப.த. திவாகரன், மாநில நிா்வாகிகள் பெருநாழி போஸ், பரமக்குடி நகா் செயலா் சேதுகருணாநிதி உள்ளிட்ட 27 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தொடா்புடைய 5 போ் காலமாகி விட்டதால், எஞ்சிய 22 போ் புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகினா். இவா்கள் அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.