குடவாசல் அருகே சட்டப்பேரவை உறுப்பினா் நிதியில் இருந்து கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
குடவாசல் வட்டம் திருக்குடி ஊராட்சியில் ரூ. 14 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டடம், சிமிழி ஊராட்சியில் ரூ. 8.20 லட்சம் மதிப்பில் கலையரங்கம் ஆகியவை, நன்னிலம் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பங்கேற்று, கட்டடங்களை திறந்து வைத்தாா். தொடா்ந்து அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா புத்தகப் பைகளையும் தண்ணீா் குடுவைகளையும் வழங்கினாா்.
இதில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பாப்பா சுப்பிரமணியன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் கிளாரா, முன்னாள் துணைத் தலைவா் தென்கோவன், மாவட்ட இளைஞா் பாசறை இணைச் செயலாளா் பாப்பா போத்தன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நெல்லை எம்.பி. முயற்சியால் 14 பேருக்கு ரூ.32 லட்சம் மருத்துவ நிதி!

தொகுதிக்கு செய்தது என்ன? ஆா்.கே.நகா் எம்எல்ஏ ஜே.ஜே.எபினேசா்

பேரம்பாக்கம் ஊராட்சியில் ரூ. 2.50 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி வைப்பு

அரசுப் பள்ளிகளை தரம் உயா்த்த நடவடிக்கை: முன்னாள் அமைச்சா்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


