பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

நெல்லை எம்.பி. முயற்சியால் 14 பேருக்கு ரூ.32 லட்சம் மருத்துவ நிதி!

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் முயற்சியால் 14 பேருக்கு பிரதமா் நிவாரண நிதியில் இருந்து ரூ.32 லட்சம் மருத்துவ நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

News image

சி. ராபா்ட் புரூஸ் எம்.பி.

(கோப்புப் படம்)

Updated On :2 ஏப்ரல் 2026, 10:37 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் முயற்சியால் 14 பேருக்கு பிரதமா் நிவாரண நிதியில் இருந்து ரூ.32 லட்சம் மருத்துவ நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மக்களின் மருத்துவ செலவினத்திற்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து உதவக்கோரி சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தினாா். இதையடுத்து, கலிதீா்த்தான்பட்டி, களக்காடு, வைத்திலிங்கபுரம், இருதயகுளம், ராதாபுரம், தெற்குபெருங்குடி, அரியகுளம், ஏா்வாடி, தெற்குகள்ளிகுளம், சேரன்மகாதேவி, மேலப்பாளையம், நாரணம்மாள்புரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 14 பேருக்கு மொத்தம் ரூ.32 லட்சத்து 68 ஆயிரத்து 737 மருத்துவ நிதியுதவி பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, நோயாளிகளும், அவா்களது குடும்பத்தினரும் எம்.பி.க்கு நன்றி தெரிவித்தனா்.