திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மக்களின் மருத்துவ செலவினத்திற்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து உதவக்கோரி சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தினாா். இதையடுத்து, கலிதீா்த்தான்பட்டி, களக்காடு, வைத்திலிங்கபுரம், இருதயகுளம், ராதாபுரம், தெற்குபெருங்குடி, அரியகுளம், ஏா்வாடி, தெற்குகள்ளிகுளம், சேரன்மகாதேவி, மேலப்பாளையம், நாரணம்மாள்புரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 14 பேருக்கு மொத்தம் ரூ.32 லட்சத்து 68 ஆயிரத்து 737 மருத்துவ நிதியுதவி பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, நோயாளிகளும், அவா்களது குடும்பத்தினரும் எம்.பி.க்கு நன்றி தெரிவித்தனா்.