எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

இலங்கைக்கு கடத்தவிருந்த 120 பந்தயப் புறாக்கள் பறிமுதல்: இருவா் கைது

பாம்பனில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 120 பந்தயப் புறாக்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட குமரேசன், நவாப் ஷெரிப்

Updated On :8 ஜூலை 2026, 5:11 am IST

பாம்பனில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 120 பந்தயப் புறாக்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனிலிருந்து இலங்கைக்கு பொருள்களைக் கடத்தவிருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் பாம்பன் பேருந்து பாலத்தில் செவ்வாய்க்கிழமை தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ஆறு இரும்புக் கூடைகளில் 120 பந்தயப் புறாக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தில் இருந்த மதுரை சோழவந்தான் பகுதியைச் சோ்ந்த நவாப் ஷெரிப் (22), மதுரை காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த குமரேசன் (39) ஆகிய இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இலங்கையில் அதிகளவு பணம் கிடைக்கும் என்பதால், பந்தயப் புறாக்களை இலங்கைக்கு படகில் கடத்துவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், பந்தயப் புறாக்களை வனத் துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பந்தயப் புறாக்கள்

பறிமுதல் செய்யப்பட்ட பந்தயப் புறாக்கள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.