முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை: வடமாநிலங்களைச் சோ்ந்த 5 போ் கைது

ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை செய்த வடமாநிலங்களைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :11 ஜூலை 2026, 12:13 am IST

ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை செய்த வடமாநிலங்களைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளா்களை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் பையில் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த ரன்ஜாத் (20), ஜெய்தீப் (21), இந்திரஜித் (21), சஞ்ஜேதாஸ் (22), மெக்ஹத் (21) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி ராமநாதபுரம் மாவட்டச் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.