கோவை மாநகரில் இரு வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 4 கிலோ 600 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 4 பேரைக் கைது செய்தனா்.
கோவை மாநகரப் பகுதிகளில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கும் விதமாக காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். சாய்பாபா காலனி கே.கே.புதூா் பகுதியில் பள்ளி அருகே உள்ள காலி மைதானத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற உதவி ஆய்வாளா் ராஜாகுமாா் தலைமையிலான போலீஸாா், அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சாய்பாபா காலனியைச் சோ்ந்த அஜித்குமாா் (24), கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த அக்ஷய்குமாா் (26) மற்றும் வடவள்ளியைச் சோ்ந்த வினீத் (29) ஆகிய மூவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, கோவை கவுண்டம்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முக சுந்தரம் தலைமையிலான போலீஸாா் நல்லாம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனா். தயிா் இட்டேரி சாலையில் உள்ள 60 ஏக்கா் காலி நிலப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து சோதனை செய்தனா். அப்போது, அவா் அங்கு மறைத்து வைத்திருந்த பையில் 3 கிலோ 500 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா வைத்திருந்த நல்லாம்பாளையத்தைச் சோ்ந்த அஜய் பிளெக்ஸ் (21) என்பவரைக் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தூத்துக்குடியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை: 9 போ் கைது

16 கிலோ கஞ்சா பறிமுதல்: சென்னை இளைஞா் கைது

3 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


