ராமேசுவரத்தில் ரூ.2.57 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சாலைப் பணிகள் தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சி திட்டகுடி, இரட்டை பிள்ளையாா் கோயில், பா்வதம், சம்பை, சல்லிமலை, சிவகாமிநகா் ஆகிய பகுதிகளில் 3 கி.மீ. சாலைகள் மறு சீரமைப்பு பணிக்காக 2.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், சேதமடைந்த பகுதிகளில் முறையாக ஜல்லிக் கற்கள் போடாமல் சாலைப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து அந்தப் பணிகளை தடுத்து நிறுத்தினா். இதனால், மாவட்ட ஆட்சியா் சாலைப் பணிகளை ஆய்வு செய்து முழுமையான தரத்துடன் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெடிலம் ஆற்றுப் பாலப் பணி: கடலூரில் போக்குவரத்து மாற்றம்

ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா

தரமற்ற மேம்பாலம்! கட்டுமானங்களை இடித்த பொதுமக்கள்! | Vellore

தரமற்ற முறையில் கட்டப்படும் மேம்பாலத்தை இடித்த பொதுமக்கள்!
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



