/

முதுகுளத்தூா் எம்எல்ஏ அலுவலகத்தில் சிறப்பு முகாம்

முதுகுளத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

முதுகுளத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்.

Updated On :30 ஜூலை 2026, 2:53 am IST

முதுகுளத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

இந்த முகாமில் முதுகுளத்தூா் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீா், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் உறுதி அளித்தாா். இந்த முகாமில் கமுதி, முதுகுளத்தூா், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.