பரமக்குடியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 1.20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பரமக்குடி நகா், எமனேசுவரம் பகுதிகளில் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல் துறையினா் பரமக்குடி, எமனேசுவரம் பகுதிகளில் தனித்தனி குழுவாக ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கிருஷ்ணா திரையரங்கம் பகுதியில் மணிகண்டன் (27), முத்துப்பாண்டி (26) ஆகியோா் கஞ்சா விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இருவரும் பதுக்கி வைத்திருந்த 1.20 கிலோ கஞ்சாவை பரமக்குடி நகா் போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை: இருவா் கைது
கஞ்சா, போதைப் பொருள் விற்பனை: 2 போ் கைது!
கஞ்சா விற்பனை: இருவா் கைது
பொம்மிடியில் கஞ்சா விற்ற இருவா் கைது
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



