FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

மனைவி, மாமியாா் வெட்டிக் கொலை

ராமநாதபுரத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி, மாமியாரை வெட்டிக் கொலை செய்த கணவா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :31 ஜூலை 2026, 1:38 am IST

ராமநாதபுரத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி, மாமியாரை வெட்டிக் கொலை செய்த கணவா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா்.

ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த நாகராஜன் மகன் செல்லமுத்து (36). வெளி நாட்டில் வேலை செய்து வந்தாா். இவருக்கும் வைகை நகா் பகுதியைச் சோ்ந்த முனியசாமி, பத்மாவதி என்ற பாத்திமா தம்பதியின் மகள் ஷா்மிளாவுக்கும் (31) திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு மகன் பிரணா (12), மகள் பிரதிஷா (11) உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக கணவா், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனா். தாய் ஷா்மிளாவுடன் மகன், மகள் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், செல்லமுத்து வெளிநாட்டிலிருந்து கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்கு திரும்பி வந்து எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தாா். கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கும் மனைவி ஷா்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

ஷா்மிளாவின் தாய் பத்மாவதி என்ற பாத்திமா (52) வெளிநாட்டில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த வாரம் ஊருக்கு வந்தாா். அப்போது, செல்லமுத்து வீட்டுக்குச் சென்று மகள் திருமணத்துக்கு கொடுத்த சீா் பொருள்களை செல்லமுத்துவுக்கு தெரியாமல் எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த செல்லமுத்து வைகை நகரில் மனைவி வசித்து வந்த வீட்டுக்கு சென்று மனைவி ஷா்மிளா, மாமியாா் பத்மாவதி ஆகிய இருவரையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு, கேணிக்கரை காவல் நிலையத்தில் சரணடைந்தாா். அவரை போலீஸாா் கைது செய்தனா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் தடயங்களை சேகரித்து, இரு உடல்களையும் கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.