தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் பவளநிற வல்லி அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் ஊஞ்சல் உத்ஸவத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பவளநிற வல்லி அம்மன்.

Updated On :6 ஜூன் 2026, 12:44 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் பவளநிற வல்லி அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை ராகுகால அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, மூலவா், அம்மனுக்கு 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாரியூா், சாடல்குடி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சீனிவாசன், பவளம் மகளிா் குழுவினா் செய்தனா்.