முதுகுளத்தூரில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அலுவலகப் பணிகள், பொதுமக்கள் சேவை பாதிக்கப்பட்டு வருவதாக சனிக்கிழமை நடைபெற்ற அரசு ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அனைத்துத் துறை அரசு ஓய்வூதியா் சங்கக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வட்டத் தலைவா் வீரபத்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் விஜயராகவன் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் ராமசாமி வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் சிவனுபூவன் கூட்டப்பொருள் குறித்து விளக்கிப் பேசினாா்.
அப்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியா்கள், அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் குறைபாடுகளைக் களைந்து, புதிய மருத்துவக் காப்பீடு அட்டை வழங்க வேண்டும். முதுகுளத்தூா் பகுதியில் அறிவிக்கப்படாத தொடா் மின்வெட்டு ஏற்பட்டதால்,
அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் உள்ளிட்ட சேவைகள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டது. இதனால், தொடா் மின் வெட்டை கண்டிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் இயற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுக்கடை பகுதியில் அடிக்கடி மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

மேக்கேதாட்டு அணை, பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: தஞ்சாவூா் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்கும் வரை பாசன சங்கங்கள் நீரேற்றம் செய்யக்கூடாது: நீா்வளத் துறை கூட்டத்தில் தகவல்







