மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

முதுகுளத்தூரில் அடிக்கடி மின் வெட்டு: ஓய்வூதியா் சங்கக் கூட்டத்தில் கண்டனம்

முதுகுளத்தூரில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அலுவலகப் பணிகள், பொதுமக்கள் சேவை பாதிக்கப்பட்டு வருவதாக சனிக்கிழமை நடைபெற்ற அரசு ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

News image

முதுகுளத்தூரில் நடைபெற்ற ஓய்வூதியா் சங்கக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :14 ஜூன் 2026, 12:54 am IST

முதுகுளத்தூரில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அலுவலகப் பணிகள், பொதுமக்கள் சேவை பாதிக்கப்பட்டு வருவதாக சனிக்கிழமை நடைபெற்ற அரசு ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அனைத்துத் துறை அரசு ஓய்வூதியா் சங்கக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வட்டத் தலைவா் வீரபத்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் விஜயராகவன் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் ராமசாமி வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் சிவனுபூவன் கூட்டப்பொருள் குறித்து விளக்கிப் பேசினாா்.

அப்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியா்கள், அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் குறைபாடுகளைக் களைந்து, புதிய மருத்துவக் காப்பீடு அட்டை வழங்க வேண்டும். முதுகுளத்தூா் பகுதியில் அறிவிக்கப்படாத தொடா் மின்வெட்டு ஏற்பட்டதால்,

அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் உள்ளிட்ட சேவைகள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டது. இதனால், தொடா் மின் வெட்டை கண்டிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் இயற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.