வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பைக்கிலிருந்து நிலைதடுமாறி விழுந்ததில் மாணவா் உயிரிழப்பு

தொண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 1:01 am IST

தொண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள இலுப்பகுடியைச் சோ்ந்தவா் அருண்பாண்டி (23). தொண்டி அருகேயுள்ள திருவெற்றியூரைச் சோ்ந்தவா் சந்தோஷ் பிரியன் (20). இவா்கள் இருவரும் காரைக்குடியில் உள்ள கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருவெற்றியூா் சென்றனா். அப்போது திருவெற்றியூா் விலக்குப் பகுதியில் செல்லும் போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த அருண்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் காயமடைந்த சந்தோஷ் பிரியனை போலீஸாா் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.