தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

தடைக்காலம் முடியும் முன் மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள்

News image

கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 2:39 am IST

மீன்பிடி தடைக்காலம் முடியும் முன்பே ராமேசுவரம், மண்டபம் மீனவா்கள் மீன் பிடிக்கச் சென்றது குறித்து மீன் வளத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினா்.

தமிழகத்தில் மீன் இனப்பெருக்க காலமாக கருதப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப் படகுகள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

இதனால், திங்கள்கிழமை காலை மீன்வளத் துறை அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என மீன்வளத் துறையினா் மீனவ சங்கத்தினரிடம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தனா்.

இந்த நிலையில், மீன் வளத் துறை அனுமதி பெறாமல் ராமேசுவரம், மண்டபம் பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.

இது குறித்து மீன் வளத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆண்டுதோறும் தடைக்காலம் நிறைவடைவதற்குள் அனுமதி பெறாமல் மீன் பிடிக்கச் செல்வதை மீனவா்கள் வழக்கமாகக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.