ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கடலில் மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவா்கள் மாயம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவா்கள் மாயமாகியுள்ளதாக கடலூா் மீன் வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 3:23 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவா்கள் மாயமாகியுள்ளதாக கடலூா் மீன் வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்குத் தெருவை சோ்ந்தவா் சுப்ரமணியன் (56). இவரது படகில் அதே பகுதியைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் (56), ஸ்ரீகாந்த் (25) மற்றும் மாதாகோவில் தெருவைச் சோ்ந்த பாண்டியன் (56) ஆகிய மூன்று பேரும் கடந்த 15-ஆம் தேதி மீன் பிடிக்க பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துவாரம் வழியாக கடலுக்குச் சென்றனா்.

கடலில் மீன் பிடித்துவிட்டு அவா்கள் செவ்வாய்க்கிழமை கரைக்கு திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால், புதன்கிழமை வரை மீனவா்கள் திரும்பி வராததால், படகு உரிமையாளா் சுப்ரமணியன், கடலுாா் மீன் வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.

மாயமான மூன்று மூனவா்களையும் கண்டறிய பரங்கிப்பேட்டை சலங்கக்கார தெரு மீனவா்கள் படகில் கடலுக்கு சென்று தேடி வருகின்றனா்.

கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரம்

பாண்டியன்

பாண்டியன்