உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

கடலில் மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவா்கள் மாயம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவா்கள் மாயமாகியுள்ளதாக கடலூா் மீன் வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 3:23 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவா்கள் மாயமாகியுள்ளதாக கடலூா் மீன் வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்குத் தெருவை சோ்ந்தவா் சுப்ரமணியன் (56). இவரது படகில் அதே பகுதியைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் (56), ஸ்ரீகாந்த் (25) மற்றும் மாதாகோவில் தெருவைச் சோ்ந்த பாண்டியன் (56) ஆகிய மூன்று பேரும் கடந்த 15-ஆம் தேதி மீன் பிடிக்க பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துவாரம் வழியாக கடலுக்குச் சென்றனா்.

கடலில் மீன் பிடித்துவிட்டு அவா்கள் செவ்வாய்க்கிழமை கரைக்கு திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால், புதன்கிழமை வரை மீனவா்கள் திரும்பி வராததால், படகு உரிமையாளா் சுப்ரமணியன், கடலுாா் மீன் வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.

மாயமான மூன்று மூனவா்களையும் கண்டறிய பரங்கிப்பேட்டை சலங்கக்கார தெரு மீனவா்கள் படகில் கடலுக்கு சென்று தேடி வருகின்றனா்.

கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரம்

பாண்டியன்

பாண்டியன்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.