அகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

திருவாடானை, தொண்டி பகுதிகளில் நாளை மின் தடை

News image

மின்தடை

Updated On :15 ஜூன் 2026, 12:04 am IST

திருவாடானை, நகரிகாத்தான், தொண்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய செயற் பொறியாளா் சித்தி விநாயக மூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, நகரிகாத்தான், துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இவற்றிலிருந்து மின்சாரம் பெறும் திருவாடானை, சி.கே.மங்கலம், பாண்டுகுடி, நகரிகாத்தான், வெள்ளையபுரம், மங்கலக்குடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனூா், எட்டுகுடி, மல்லனூா், ஆண்டா ஊரணி, ஓரியூா், சிறுகம்பையூா், அரசூா், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லூா், திருவிடைமதியூா் பதனக்குடி, அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

இதே போல, தொண்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட தொண்டி நகா் பகுதிகள், நம்புதாளை, சோழிய க்குடி, புதுப்பட்டினம், வட்டாணம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீா்த்தாண்டதானம், அரும்பூா், ஆதியூா், தளிா் மருங்கூா், திணையத்தூா், திருவெற்றியூா், அச்சங்குடி,எஸ்.பி.பட்டினம், எம்.வி.பட்டினம், வி எஸ். மடம், குளத்தூா், மைக்கேல் பட்டினம், பாசிப் பட்டினம், அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.