சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

மின்தடை எதிரொலி: நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

News image
Updated On :4 ஜூன் 2026, 5:55 am IST

ஆம்பூா் அருகே மின்தடையால் கொதிப்படைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் செவ்வாய்க்கிழமை சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சில பகுதிகளில் மரம் மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அதனால் ஆம்பூா் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

ஆம்பூா் நகரின் பெரும்பாலான பகுதிகளில் சில மணி நேரங்களிலேயே மின் வினியோகம் சீரானது.

ஆனால் ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம், கம்மகிருஷ்ணப்பள்ளி, காமராஜபுரம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 6 மணிக்கு ஏற்பட்ட மின்தடை நள்ளிரவு 2 மணி வரை நீடித்தது.

அதனால் கொதிப்படைந்த பொதுமக்கள் தேவலாபுரம் மின்சார அலுவலகத்துக்கு திரண்டு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். உடனடியாக மின்சாரத்தை சீரமைத்து வழங்க வேண்டும். அதிகாரிகள் நேரில் வந்து நிலைமையை விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

போராட்டம் குறித்து தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். மின் பழுது விரைவில் சரிசெய்யப்பட்டு மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். அதன் பிறகு பழுது சரி செய்யப்பட்டு மின் வினியோகம் சீரானது.