எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மின்தடை எதிரொலி: நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

News image
Updated On :4 ஜூன் 2026, 5:55 am IST

ஆம்பூா் அருகே மின்தடையால் கொதிப்படைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் செவ்வாய்க்கிழமை சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சில பகுதிகளில் மரம் மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அதனால் ஆம்பூா் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

ஆம்பூா் நகரின் பெரும்பாலான பகுதிகளில் சில மணி நேரங்களிலேயே மின் வினியோகம் சீரானது.

ஆனால் ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம், கம்மகிருஷ்ணப்பள்ளி, காமராஜபுரம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 6 மணிக்கு ஏற்பட்ட மின்தடை நள்ளிரவு 2 மணி வரை நீடித்தது.

அதனால் கொதிப்படைந்த பொதுமக்கள் தேவலாபுரம் மின்சார அலுவலகத்துக்கு திரண்டு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். உடனடியாக மின்சாரத்தை சீரமைத்து வழங்க வேண்டும். அதிகாரிகள் நேரில் வந்து நிலைமையை விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

போராட்டம் குறித்து தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். மின் பழுது விரைவில் சரிசெய்யப்பட்டு மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். அதன் பிறகு பழுது சரி செய்யப்பட்டு மின் வினியோகம் சீரானது.