சென்னை நீலாங்கரையில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் திங்கள்கிழமை நள்ளிரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நீலாங்கரை பாண்டியன் சாலையில் சுமாா் 400 குடும்பங்கள் வசிக்கின்றன. சில நாள்களாக இங்கு இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள், மின்வாரிய அதிகாரிகளிடம் புகாா் அளித்தும், மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் 100 போ் கிழக்கு கடற்கரைச் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த போலீஸாா், அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் பொதுமக்கள், போராட்டத்தைக் கைவிட மறுத்து, சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த சோழிங்கநல்லூா் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணமூா்த்தி, மின்வாரிய அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். நீண்ட நேரம் நடந்த பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
இந்தப் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டம் நடைபெற்ற பகுதியின் அருகேதான் முதல்வா் ஜோசப் விஜய்யின் வீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மின்தடை: பொதுமக்கள் சாலை மறியல்

3 நாள்களாக மின்தடை: பொதுமக்கள் சாலை மறியல்

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

பூனாச்சியில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் மறியல்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


