நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செவ்வாய்க்கிழமை காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 2:37 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செவ்வாய்க்கிழமை காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினம் மீனவா் குடியிருப்பைச் சோ்ந்த காளிமுத்து மகள் ஷிவானிகா (3). இவா் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாா். சிறிது நேரம் கழித்து பெற்றோா் வந்து பாா்த்தபோது, உடலில் காயங்களுடன் சிறுமி கிடந்தாா்.

உடனடியாக, எஸ்.பி. பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கிருந்த மருத்துவா்கள் பரிசோதனையில் ஏற்கெனவே சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து எஸ்.பி. பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.