கோவை மாவட்டம் சூலூர் அருகே சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடல் கூராய்வு முடிந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், தொடர்புடைய குற்றவாளிகள் இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
முன்னதாக, காணாமல் போன அச்சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் கூராய்வுக்காக கோவை இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மருத்துவமனையில் உடல் கூராய்வு நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் அவரது பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
உடலைப் பெற்றுக்கொண்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், ஆம்புலன்ஸ் மூலம் தங்களது சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதிக்கு உடலை எடுத்துச் சென்றனர்.
அங்கு சிறுமிக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










