கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பாக, தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ், சம்பவம் நடந்த பகுதிகள் மற்றும் காவல் நிலையத்தில் நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார்.
சூலூர் அருகே கடந்த இரண்டு நாள்களுக்கு முன் காணாமல் போன சிறுமி, கண்ணம்பாளையம் குளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமி கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி மக்கள் மற்றும் சிறுமியின் பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக காவல் துறைத் தலைவர் (DGP) சந்தீப் ராய் ரத்தோர் கோவைக்கு நேரில் வருகை தந்தார்.
சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையம் குளம் பகுதிக்குச் சென்ற அவர், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குற்றவாளிகள் எந்த வழியாக வந்திருக்கக்கூடும், தடயங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அங்கிருந்த உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, சூலூர் காவல் நிலையத்திற்குச் சென்ற டிஜிபி, அங்கு இவ்வழக்கு தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
2011 சாலை விபத்து வழக்கிலிருந்து முன்னாள் டிடிசி ஓட்டுநா் விடுவிப்பு!

சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!

இன்றைய செய்திகள் மே 23 - நேரலை!
கோவை சிறுமி பாலியல் கொலை! முதல்வர் கடும் நடவடிக்கை எடுப்பார்: சூலூர் எம்எல்ஏ
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK



