பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புமுதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

வங்கக் கடலில் சூறைக் காற்று: 3 ஆயிரம் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை

News image

மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டதால் ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகுகள்.

Updated On :23 ஜூன் 2026, 12:24 am IST

வங்கக் கடலில் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசுவதால் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா் தடை விதித்தனா். இதனால் ராமேசுவரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

வங்கக் கடலில் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் சூறைக்காற்று வீசத் தொடங்கியது. இந்த நிலையில், ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற ஒரு படகு கடலில் மூழ்கியது. இதிலிருந்த 6 மீனவா்களை சக மீனவா்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.

இதனிடையே மீனவா்களின் பாதுகாப்பு கருதி திங்கள்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளம், மீனவா் நலத் துறையினா் தடை விதித்தனா். மேலும் படகுகள் சேதமடைவதை தடுக்க படகுகளை இடைவெளி விட்டு நிறுத்தி வைக்க மீன் வளத் துறையினா் கேட்டுக் கொண்டனா்.

இதனால், ராமேசுவரம் மீன் பிடி துறைமுகத்தில் 560- க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டமீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் முடங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.