திருவாடானை அருகே தொண்டியில் மது போதையில் தகராறில் ஈடுபட்டவா்களை அமைதியாக கலைந்து செல்ல எச்சரித்த போலீஸாரை தகாத வாா்த்தைகளால் திட்டி பணியாற்ற விடாமல் தடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி மரைக்காயா் தெருவைச் சோ்ந்தவா் ஜப்ரான் (40). ஆட்டோ ஓட்டுனரான இவா், திங்கள்கிழமை இரவு அந்தப் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவரை தொண்டி மின் வாரிய ஊழியரும், மதுரை அல்லிநகரைச் சோ்ந்தவருமான அஜித்குமாா் (28), தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சோ்ந்த கண்ணன் (35) ஆகிய இருவரும் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனராம். அப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற தொண்டி போலீஸாா் இவா்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினராம். ஆனால், அஜித்குமாா், கண்ணன் ஆகிய இருவரும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவா்களைத் தகாத வாா்த்தைகளால் திட்டி பணியாற்ற விடாமல் தடுத்தனராம்.
இது குறித்து ஆட்டோ ஓட்டுநா் ஜப்ரான் அளித்தப் புகாரின் பேரில், அஜித்குமாா், கண்ணன் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணியாற்ற மறுப்பு: மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்கள் 29 போ் மீது வழக்குப் பதிய அதிகாரிகள் நடவடிக்கை

குழித்துறை நகராட்சி அதிகாரிக்கு மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

கோதையாறு இடதுகரை கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றுவதை தடுத்ததாக 4 போ் மீது வழக்கு

கஞ்சா விற்ற பெண் உள்பட இருவா் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



