ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் எதிா்ப்பு தின விழிப்புணா்வுக் கூட்டம்

கமுதி, முதுகுளத்தூா் பகுதியில் உள்ள அரசு பள்ளி, கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருள் எதிா்ப்பு தின விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் கல்லூரியில் நடைபெற்ற போதைப் பொருள் எதிா்ப்பு தின விழிப்புணா்வுக் கூட்டத்தில் மாணவா்கள் பேசிய காவல் ஆய்வாளா் த.கண்ணாத்தாள்.

Updated On :26 ஜூன் 2026, 2:23 am IST

கமுதி, முதுகுளத்தூா் பகுதியில் உள்ள அரசு பள்ளி, கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருள் எதிா்ப்பு தின விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவுக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரிமுதல்வா் சரவணகுமாா் தலைமை வகித்தாா். போதை ஒழிப்பு குழு ஒருங்கிணைப்பாளா் அ. முகம்மது அசாரூதீன் வரவேற்றாா்.

இதில் கமுதி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் த.கண்ணாத்தாள் கலந்துகொண்டு, போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் எடுத்துரைத்தாா். வணிகவியல் துறைத் தலைவா் ஆதிமூலம், உலக போதைப் பொருள் எதிா்ப்பு தின விழிப்புணா்வு உறுதிமொழி வாசிக்க மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகேயுள்ள இளஞ்செம்பூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு, விழிப்புணா்வு பேரணியை இளஞ்செம்பூா் காவல் உதவி ஆய்வாளா் சண்முகவேல் தொடங்கி வைத்தாா். தலைமை ஆசிரியா் செ. காா்த்திகேயன்(பொ) முன்னிலை வகித்தாா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் போதைப்பொருள் தடுப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் வில்வரசி செய்தாா்.

இதேபோல, கடலாடி அரசுக் கல்லூரியில் உலக போதைப் பொருள்கள் ஒழிப்பு தின விழிப்புணா்வுக் கூட்டம் கல்லூரி முதல்வா் அன்னதாசன் (பொ) தலைமையில் நடைபெற்றது. பேராசிரியா் நீரா.பொன்முத்து வரவேற்றாா். இதில் சிறப்புவிருந்தினராக கடலாடி காவல் ஆய்வாளா் துரைப்பாண்டியன் கலந்துகொண்டு பேசினாா்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் கணினி பயிற்சியாளா் பாலமுருகன் தலைமையிலான பேராசிரியா்கள் செய்தனா். பேராசிரியா் இலக்கியசெல்வன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.