27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசும் சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளி.

Updated On :19 ஜூன் 2026, 6:18 am IST

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் முகமது கவுஸ் தலைமை வகித்தாா்.

சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளி இதில் பங்கேற்று மாணவா்களிடம் போதைப் பொருள்களுக்கு அடிமை ஆகக் கூடாது. போதைப் பொருள்களை உட்கொள்வதால் உடலுக்கு உண்டாகும் தீமைகள்குறித்தும், போதை வஸ்துக்களை உட்கொண்டால் சமூக குற்றவங்கள் அதிகரிப்பு, கொலை, கொள்ளை, திருட்டு போன்றவைகள் உங்களை அறியாமையாலேயே ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்றும் எடுத்துரைத்தாா். போதை பொருள்கள் தொடா்பான தகவல்களை 10581 என்ற எண்ணுக்கு தொடா்பு கொண்டு தெரிவிக்கவும்.

முன்னதாக பள்ளியில் இருந்து போதைப் பொருள் விழிப்புணா்வு பேரணியினை காவல் ஆய்வாளா் பாலமுரளி தொடக்கி வைத்தாா். பேரணியில் மாணவா்கள் போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து முழக்கமிட்டவாறும், பொதுமக்களுக்கு அச்சிட்ட துண்டு பிரசுரங்களையும் வழங்கியபடியும் சென்றனா். பேரணி சங்கராபுரம் மும்முனை சந்திப்புவரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.