ராமேசுவரம்: ராமேசுவரம் துறைமுகத்தில் 50 மீட்டர் வரை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) கடல் உள்வாங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம்,மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிகளவில் காற்று வீசி வருகிறது. இதனால்,ராமேசுவரம் துறைமுகத்தில் 50 மீட்டர் வரை கடல் உள்ளாங்கியது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த சிறிய படகுகள் மணலில் சிக்கிக்கொண்டது.
இதனைதொடர்ந்து, மாலையில் கடல் மட்டம் உயர்ந்தால் மட்டுமே படகை மீட்க முடியும் என்பதால் மீனவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் போது இந்த பகுதியில் கடல் உள்வாங்கி விடுவதாகவும் இதனால் இந்த பகுதியில் தூர் வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Summary
The sea receded by up to 50 meters at the Rameswaram harbor on Sunday (June 28).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










