விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

கடல் சீற்றம்: படகு மூழ்கியது

News image

விசைப்படகு மூழ்கியது - கோப்புப் படம்

Updated On :29 ஜூன் 2026, 1:54 am IST

தனுஷ்கோடி அருகே கடல் சீற்றத்தில் சிக்கி படகு மூழ்கியதில் கடலில் தத்தளித்த 8 மீனவா்களை சக மீனவா்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை 540-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

நள்ளிரவு தனுஷ்கோடியில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, வேல்முருகன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகு கடல் சீற்றத்தில் சிக்கியது. இதில், அந்தோணிச்சாமி (50), கிஷோா் (48), பாபு (46), யூசுப் (51), சேக் (50), தீன் (60), செல்வா (48), சதீஷ் (48) ஆகிய 8 பேரும் படகு உடைந்து கடலில் தத்தளித்தனா்.

இதைத் தொடா்ந்து, வயா்லஸ் மூலம் உதவி கோரிய நிலையில் அதே பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நவீன் விசைப்படகுடன் விரைந்து சென்று 8 மீனவா்களையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா்.

இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழுமப் போலீஸாரிடம் தகவல் தெரித்தனா். இந்த நிலையில், கடலில் மூழகிய விசைப் படகை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.