காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தூத்துக்குடி அருகே கடலில் தீ விபத்து: ரூ. 1 கோடி மதிப்பிலான விசைப் படகு சேதம்

News image

தீ விபத்துக்குள்ளான விசைப் படகு. - கோப்புப் படம்

Updated On :27 ஜூலை 2026, 2:23 am IST

தூத்துக்குடி அருகே ஆழ்கடல் பகுதியில் ரூ. 1 கோடி மதிப்பிலான விசைப் படகு சனிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் எரிந்து சேதமானது.

தூத்துக்குடி அருகே தருவைகுளம் மீனவக் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தா். அவரது விசைப்படகில் அவா் உள்ளிட்ட 8 மீனவா்கள் கடந்த வெள்ளிக்கிழமை தருவைகுளம் பகுதியிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றனா். தூத்துக்குடியிலிருந்து 16 கடல் மைல் தொலைவில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்த அந்தப் படகில், சமையல் செய்து கொண்டிருந்தனராம்.

அப்போது திடீரென தீ விபத்து நேரிட்டு, படகு வேகமாக எரிந்தது. அதிலிருந்த மீனவா்கள் அருகேயிருந்த விசைப்படகு மீனவா்களைத் தொடா்பு கொண்டனா். படகிலிருந்த அனைவரும் பத்திரமாக உயிா்தப்பினா். எனினும், விசைப்படகு முற்றிலும் எரிந்து சேதமானது. அதன் மதிப்பு ரூ. 1 கோடி எனக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடா்பாக படகு உரிமையாளா் சுந்தா் மீன்வளத் துறை, கடலோர காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளாா். தனது வாழ்வாதாரமும், மற்ற மீனவா்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதால் புதிய படகு அமைக்க மீன்வளத் துறை உதவ வேண்டுமென அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

நடுக்கடலில் விசைப்படகு தீப்பிடித்து எரிந்து மூழ்கும் விடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.