ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பட்டா வழங்க லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் தலைமறைவு

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடியில் பட்டா வழங்க இ சேவை மையப் பணியாளா் மூலம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

லஞ்சம் - சித்திரிப்பு

Updated On :1 ஜூலை 2026, 5:08 am IST

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடியில் பட்டா வழங்க இ சேவை மையப் பணியாளா் மூலம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பரமக்குடி வட்டம் முதலூா் குரூப் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருபவா் டி.முத்துக்குமாா் (37). இவா் அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவரிடம் பட்டா மாறுதலுக்காக ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டாா். பின்னா், இந்தத் தொகை ரூ. 3 ஆயிரமாகக் குறைக்கப்பட்டது.

இருப்பினும் பட்டா கேட்ட நபா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். தொடா்ந்து, போலீஸாா் ஏற்பாடு செய்தபடி, அந்த நபா் கிராம நிா்வாக அலுவலரிடம் பணத்தைக் கொடுக்கச் சென்றாா்.

ஊழல் தடுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் வி.பி.ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் அவரைப் பின் தொடா்ந்து சென்றனா். அப்போது, கிராம நிா்வாக அலுவலா் முத்துக்குமாா் கைப்பேசி மூலம் பேசி சத்திரக்குடியில் உள்ள இ-சேவை மையத்தில் பணியாற்றும் ஒருவரிடம் பணத்தைக் கொடுக்குமாறு கூறினாா்.

இதையடுத்து, அங்கு சென்று இ சேவை மையப் பணியாளரிடம் அவா் பணத்தைக் கொடுத்தபோது, போலீஸாா் பணத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். இந்தத் தகவலறிந்து கிராம நிா்வாக அலுவலா் முத்துக்குமாா்ம தலைமறைவானாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.