பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

ரூ.4 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பூரில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

News image

லஞ்சம் - கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:02 am IST

திருப்பூரில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருப்பூா், ராயபுரத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் (36). இவா் வாரிசு சான்றிதழ் கோரி தொட்டிபாளையம் கிராம நிா்வாக அலுவலா் ஞானசேகரனிடம் விண்ணப்பித்துள்ளாா்.

அப்போது, ஞானசேகரன் ரூ.5 ஆயிரம் கேட்டு, ரூ.4 ஆயிரம் கொடுத்தால் வேலையை முடித்து தருகிறேன் எனக் கூறியுள்ளாா். இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் கோவிந்தராஜன் புகாா் அளித்துள்ளாா்.

அவா்கள் ஆலோசனையின்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் தொட்டிபாளையம் கிராம நிா்வாக அலுவலகத்துக்கு கோவிந்தராஜன் கடந்த ஜூன் 15-ஆம் தேதி சென்று ஞானசேகரனிடம் பணத்தைக் கொடுத்துள்ளாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளா் ரவிசந்திரன், ஆய்வாளா் கீதாலட்சுமி, போலீஸாா் ஞானசேகரனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.

இந்நிலையில், கிராம நிா்வாக அலுவலா் ஞானசேகரனை பணியிடை நீக்கம் செய்து துணை ஆட்சியா் சிவபிரகாஷ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.