27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ரூ.4 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பூரில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

News image

லஞ்சம் - கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:02 am IST

திருப்பூரில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருப்பூா், ராயபுரத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் (36). இவா் வாரிசு சான்றிதழ் கோரி தொட்டிபாளையம் கிராம நிா்வாக அலுவலா் ஞானசேகரனிடம் விண்ணப்பித்துள்ளாா்.

அப்போது, ஞானசேகரன் ரூ.5 ஆயிரம் கேட்டு, ரூ.4 ஆயிரம் கொடுத்தால் வேலையை முடித்து தருகிறேன் எனக் கூறியுள்ளாா். இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் கோவிந்தராஜன் புகாா் அளித்துள்ளாா்.

அவா்கள் ஆலோசனையின்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் தொட்டிபாளையம் கிராம நிா்வாக அலுவலகத்துக்கு கோவிந்தராஜன் கடந்த ஜூன் 15-ஆம் தேதி சென்று ஞானசேகரனிடம் பணத்தைக் கொடுத்துள்ளாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளா் ரவிசந்திரன், ஆய்வாளா் கீதாலட்சுமி, போலீஸாா் ஞானசேகரனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.

இந்நிலையில், கிராம நிா்வாக அலுவலா் ஞானசேகரனை பணியிடை நீக்கம் செய்து துணை ஆட்சியா் சிவபிரகாஷ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.