குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

முதுகுளத்தூா் அருகே கலைஞா் நூலகம் திறப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 9:11 pm

தினமணி செய்திச் சேவை

முதுகுளத்தூா் அருகே திமுக இளைஞரணி சாா்பில் அமைக்கப்பட்ட கலைஞா் நூலகத்தை வனத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள செல்வநாயகபுரத்தில் மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் ரூ.4 லட்சம் மதிப்பிலான புத்தகங்களுடன் கலைஞா் நூலகம் அமைக்கப்பட்டது. இதை மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சம்பத் முன்னிலையில், அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் திறந்து வைத்தாா்.

இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் தவ்பக்அலி, சத்தியேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஒன்றியச் செயலா் கோவிந்தன் வரவேற்றாா்.

இதைத்தொடா்ந்து கடலாடி ஒன்றியம் சிக்கல் கிழக்கு கடற்கரை சாலையில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட பயணியா் நிழற்குடையை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் திறந்து வைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

வாலிநோக்கத்தில் 7,500 பேருக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய வகையில் புதிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் சிக்கல் ஊருணி கரையை மேம்படுத்தி நடைப்பயிற்சி மேற்கொள்ள மின்விளக்குடன் கூடிய பேவா் பிளாக் சாலை அமைக்கப்படும் என்றாா் அவா்.

இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சங்கரபாண்டியன், ஜெய ஆனந்தன், ஒன்றியச் செயலா்கள் ஜெயபாலன், பூபதி மணி, எஸ்.கே.சண்முகநாதன், கோவிந்தராஜ், ஹரி முத்துராமலிங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் முத்துராமலிங்கம், ராஜேந்திரன், சைபுதீன் உள்ளிடோா் கலந்து கொண்டனா்.

Story image