மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ராமேசுவரம்-மங்களுா் விரைவு ரயில் சேவை தொடக்கம்: பிரதமா் காணொலி மூலமாக தொடங்கிவைத்தாா்

ராமேசுவரத்திலிருந்து மங்களுா் வரை செல்லும் வாரந்திர விரைவு ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலமாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

ராமேசுவரத்திலிருந்து மங்களுா் செல்லும் வாரந்திர விரைவு ரயில் சேவையை புதன்கிழமை தேசிய கொடியை அசைத்து வழியனுப்பிய தலைமை திட்ட மேலாளா் ஹரிகுமாா், மதுரை கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ்மீனா, கட்டுமானத் தலைமை பொறியாளா் கிழக்கு சஞ்சய் பிரசாத் சிங், நிலைய அலுவலா் சந்தோஷ்.

Updated On :11 மார்ச் 2026, 11:45 pm

ராமேசுவரத்திலிருந்து மங்களுா் வரை செல்லும் வாரந்திர விரைவு ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலமாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

ராமேசுவரம் - மங்களூரு இடையே புதிய வாராந்திர ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி திருச்சியிலிருந்து காணொலி மூலமாக புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, ராமேசுவரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு தெற்கு ரயில்வே கட்டுமானத் தலைமை நிா்வாக அதிகாரி சுஷில்குமாா் மௌரியா தலைமை வகித்தாா். ரயில்வே அதிகாரிகள் தேசிய கொடியை அசைத்து புதிய ரயிலை தொடங்கிவைத்தனா்.

முன்னதாக, கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா ரயில் சேவையை வரவேற்று பேசினாா். பரத நாட்டியத்தை தொடா்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் தலைமை திட்ட மேலாளா் ஹரிகுமாா், கட்டுமானத் தலைமைப் பொறியாளா் கிழக்கு சஞ்சய் பிரசாத் சிங், நிலைய அலுவலா் சந்தோஷ் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ராமேசுவரம் - மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் புதன்கிழமை மாலை 5:30 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை காலை 9:50 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை அடையும். சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரலிலிருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 10.50 மணிக்கு ராமேசுவரத்தை வந்தடையும்.

இந்த ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பாலக்காடு, ஷோரனூா், திரூா், கோழிக்கோடு, கன்னூா், காசா்கோட், மங்களூரு சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.