ஸ்ரீவில்லிபுத்தூரில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் திறப்பு


விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ், ரூ.8.80 கோடியில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தை பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம் மத்திய அரசின் அம்ருத் பாரத் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டு, மேம்படுத்தும் பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம்.

பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம்.
இதில் ஆண்டாள் கோயில் கோபுர வடிவிலான அலங்கார முகப்பு, நுழைவு வளைவு, ரயில் நிலையச் சாலை மேம்படுத்தி மின் விளக்கு அமைத்தல், தங்கும் அறைகள், ரயில் நிலைய வடிவமைப்பு மாற்றம், 5 ஜி இணைய சேவை, மின் தூக்கி(லிப்ட்), வாகனக் காப்பகம், காத்திருப்பு அறைகள், சுகாதார வளாகம், எண்ம அறிவிப்பு பலகை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட இந்த ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...