இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் திறப்பு

News image

பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம்.

Updated On :1 மார்ச் 2026, 9:34 pm

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ், ரூ.8.80 கோடியில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தை பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம் மத்திய அரசின் அம்ருத் பாரத் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டு, மேம்படுத்தும் பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

   பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம்.

பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம்.

   பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம்.

பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம்.

இதில் ஆண்டாள் கோயில் கோபுர வடிவிலான அலங்கார முகப்பு, நுழைவு வளைவு, ரயில் நிலையச் சாலை மேம்படுத்தி மின் விளக்கு அமைத்தல், தங்கும் அறைகள், ரயில் நிலைய வடிவமைப்பு மாற்றம், 5 ஜி இணைய சேவை, மின் தூக்கி(லிப்ட்), வாகனக் காப்பகம், காத்திருப்பு அறைகள், சுகாதார வளாகம், எண்ம அறிவிப்பு பலகை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட இந்த ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.