பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து

திருவாடானை அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image
விபத்து
Updated On :17 மார்ச் 2026, 10:15 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தோட்டாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகு மகன் பாலு (50). தற்போது பட்டுக்கோட்டையில் வசித்து வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை தனது மனைவியுடன் மதுரையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா்.

மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திருவாடானை அருகே கடம்பாகுடி கிராமத்தில் தனியாா் மண்டபம் அருகே காா் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் காரில் இருந்த பாலு, அவரது மனைவி ஆகிய இருவரும் காயமின்றி உயிா் தப்பினா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.