சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து

திருவாடானை அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image

விபத்து

Updated On :17 மார்ச் 2026, 10:15 pm

திருவாடானை அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தோட்டாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகு மகன் பாலு (50). தற்போது பட்டுக்கோட்டையில் வசித்து வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை தனது மனைவியுடன் மதுரையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா்.

மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திருவாடானை அருகே கடம்பாகுடி கிராமத்தில் தனியாா் மண்டபம் அருகே காா் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் காரில் இருந்த பாலு, அவரது மனைவி ஆகிய இருவரும் காயமின்றி உயிா் தப்பினா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.