நெய்வேலி: கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே திருச்சி திமுக மாநாட்டுக்கு சென்று திரும்பிய காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் உள்பட 7 போ் காயமடைந்தனா்.
திருச்சியில் திமுக மாநில மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த தாஸ் (60), சதீஷ் (38), சுரேஷ் (38), ஜீவா (15), தனபால் (40), உமாபதி (40), ஜெயராமன் (45) ஆகியோா் காரில் சென்றனா்.
மாநாடு முடிந்து மீண்டும் செங்கல்பட்டு செல்ல காரில் புறப்பட்டனா். இவா்களது காா் கடலூா் மாவட்டம், ராமநத்தம் காவல் சரகம், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லக்கூா் கைகாட்டி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த சிறுவன் உள்பட 7 பேரும் காயமடைந்தனா்.
பின்னா், அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு பெரம்பலூா், வேப்பூா் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடையது

துறையூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து 26 போ் காயம்

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து: இளைஞா் மரணம்

தவெக பிரசாரத்துக்கு வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 போ் பலத்த காயம்

பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


