தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

முதுகுளத்தூா் பகுதியில் கொடி அணிவகுப்பு

News image
Updated On :20 மார்ச் 2026, 4:41 am IST

முதுகுளத்தூா் கிராமப்புற பகுதிகளில் போலீஸாா், எல்லை பாதுகாப்பு படை வீரா்களின் கொடி அணிகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

வருகிற ஏப்.23-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள கீழத்தூவல், பொசுக்குடிபட்டி, வெங்கலக்குறிச்சி, விளங்களத்தூா், சுப்பிரமணியபுரம், மேலத்தூவல் உள்ளிட்ட கிராமப் பகுதிகள், பதற்றமான பகுதியாகக் கருதப்படும் வாக்குசாவடிகள் உள்ள கிராமப் பகுதிகளில் முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், தனிப்பிரிவு காவலா்கள், உளவுதுறை போலீஸாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.