நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முதுகுளத்தூா் பகுதியில் கொடி அணிவகுப்பு

News image
Updated On :19 மார்ச் 2026, 11:11 pm

தினமணி செய்திச் சேவை

முதுகுளத்தூா் கிராமப்புற பகுதிகளில் போலீஸாா், எல்லை பாதுகாப்பு படை வீரா்களின் கொடி அணிகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

வருகிற ஏப்.23-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள கீழத்தூவல், பொசுக்குடிபட்டி, வெங்கலக்குறிச்சி, விளங்களத்தூா், சுப்பிரமணியபுரம், மேலத்தூவல் உள்ளிட்ட கிராமப் பகுதிகள், பதற்றமான பகுதியாகக் கருதப்படும் வாக்குசாவடிகள் உள்ள கிராமப் பகுதிகளில் முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், தனிப்பிரிவு காவலா்கள், உளவுதுறை போலீஸாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.