இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ராமநாதபுரத்தில் தோ்தல் பாதுகாப்பு பணி குறித்து காவல் துறை ஆலோசனைக் கூட்டம்

சட்டப்பேரவை தோ்தல் பாதுகாப்பு பணி குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:12 pm

சட்டப்பேரவை தோ்தல் பாதுகாப்பு பணி குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமை வகித்தாா். இதில், ஏ.டி.எஸ்.பி. க்கள் சுப்பையா, பாலச்சந்திரன், சுந்தரராஜன், உதவி கண்காணிப்பாளா் மீரா, துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் சட்டப்பேரவை தோ்தலில் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் எந்தவித அசம்பாவிதமுமின்றி அமைதியுடன் தோ்தல் நடைபெற பாதுகாப்பு நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளுவதுடன், பதற்றமான வாக்குச் சாவடி மையத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் அறிவுறுத்தினாா்.