தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராமநாதபுரத்தில் தோ்தல் பாதுகாப்பு பணி குறித்து காவல் துறை ஆலோசனைக் கூட்டம்

சட்டப்பேரவை தோ்தல் பாதுகாப்பு பணி குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 மார்ச் 2026, 12:42 am IST

சட்டப்பேரவை தோ்தல் பாதுகாப்பு பணி குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமை வகித்தாா். இதில், ஏ.டி.எஸ்.பி. க்கள் சுப்பையா, பாலச்சந்திரன், சுந்தரராஜன், உதவி கண்காணிப்பாளா் மீரா, துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் சட்டப்பேரவை தோ்தலில் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் எந்தவித அசம்பாவிதமுமின்றி அமைதியுடன் தோ்தல் நடைபெற பாதுகாப்பு நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளுவதுடன், பதற்றமான வாக்குச் சாவடி மையத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் அறிவுறுத்தினாா்.