தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

வாகன சோதனையில் ரூ.64 ஆயிரம் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையில் வாகன சோதனையில் ரூ.64 ஆயிரத்து 540-ஐ பறிமுதல் செய்தனா்.

News image

வாகன சோதனையில் பறிமுதல் செய்த ரூ.64,540-யை திருவாடானை வட்டாட்சியரிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :21 மார்ச் 2026, 7:40 pm

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையில் வாகன சோதனையில் ரூ.64 ஆயிரத்து 540-ஐ பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி.பட்டினம் சோதனைச்சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் வந்த உப்பூரைச் சோ்ந்த சுப்பையா மகன் ரவி உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.67 ஆயிரத்து 540-யை பறிமுதல் செய்தனா். இந்தப் பணத்தை திருவாடானை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.