கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.6.71 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம்.

(கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

பரமக்குடி, முதுகுளத்தூா், திருவாடானை சட்டப்பேரவை தொகுதிகளில் வாகனத் தணிக்கையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 6.71 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து கருவூலத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் 72 தோ்தல் பறக்கும் படையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பரமக்குடி தொகுதியில் தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகன தணிக்கை மேற்கொண்டபோது உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2,63,520-ஐ பறிமுதல் செய்தனா். இதேபோல, திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,13,300 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2,95,000 பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று தொகுதிகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 6,71,820-ஐ அந்தந்த பகுதிகளில் உள்ள கருவூலத்தில் தோ்தல் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா். உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தினா்.

கமுதி: கடலாடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வாலிநோக்கம்- ராமநாதபுரம் விலக்கில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி ஹரிகாா்த்திக், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சண்முகசுந்தரம் அடங்கிய குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், சிறைக்குளத்தை சோ்ந்த சாந்தா என்பவரிடமிருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.60 ஆயிரத்தை பறிமுதல் செய்து முதுகுளத்தூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் விஜயாவிடம் ஒப்படைத்தனா்.