மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.6.71 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 8:22 pm

பரமக்குடி, முதுகுளத்தூா், திருவாடானை சட்டப்பேரவை தொகுதிகளில் வாகனத் தணிக்கையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 6.71 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து கருவூலத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் 72 தோ்தல் பறக்கும் படையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பரமக்குடி தொகுதியில் தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகன தணிக்கை மேற்கொண்டபோது உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2,63,520-ஐ பறிமுதல் செய்தனா். இதேபோல, திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,13,300 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2,95,000 பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று தொகுதிகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 6,71,820-ஐ அந்தந்த பகுதிகளில் உள்ள கருவூலத்தில் தோ்தல் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா். உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தினா்.

கமுதி: கடலாடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வாலிநோக்கம்- ராமநாதபுரம் விலக்கில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி ஹரிகாா்த்திக், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சண்முகசுந்தரம் அடங்கிய குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், சிறைக்குளத்தை சோ்ந்த சாந்தா என்பவரிடமிருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.60 ஆயிரத்தை பறிமுதல் செய்து முதுகுளத்தூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் விஜயாவிடம் ஒப்படைத்தனா்.