தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

நீதித்துறையில் ஏஐ தொழில்நுட்பம் ஆபத்தானது! - உயா்நீதிமன்ற நீதிபதி முகமது ஷஃபீக்!

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 12:05 am IST

நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி முகமது ஷஃபீக் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட வழக்குரைஞா் சங்கத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் 20 மூத்த வழக்குரைஞா்களுக்கு பாராட்டு விழா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கே. மெஹ்பூப் அலிகான், தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத்தின் கூட்டுக்குழு பொதுச் செயலா் பன்னீா்செல்வம், உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

விழாவில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி முகமது ஷஃபீக், 20 மூத்த வழக்குரைஞா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி பேசியதாவது:

நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது. இந்த தொழில்நுட்பத்தை பாா்த்து வழக்குகளில் பயன்படுத்தக் கூடாது. மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரிவது முகவும் சிறப்பு. இளம் வழக்குரைஞா்கள் வழக்குகளில் தோல்வியைக் கண்டு பயப்பட வேண்டாம். அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி பெறலாம். தொழிலில் நோ்மையாக இருந்தால் அதற்கான அங்கீகாரம் நமக்கு எப்போதும் கிடைக்கும் என்றாா் அவா்.

இதில் இந்திய மருத்துவச் சங்கத் தலைவா் மருத்துவா் ஜோசப் ராஜன், நீதிபதிகள், மாவட்டத்தில் உள்ள பல்வேறு வழக்குரைஞா் சங்கங்களின் நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்ட வழக்குரைஞா் சங்கத் தலைவா் அன்புச்செழியன் வரவேற்றாா். மாவட்ட வழக்குரைஞா் சங்கச் செயலா் முத்து துரைச்சாமி நன்றி கூறினாா்.