திருவாடனை, மே 2: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள வெளியக்கோட்டை புனித சூசையப்பா் தேவாலயத்தில் சப்பர பவனி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேவாலயத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சப்பர பவனி திருவிழா நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, தினசரி சிறப்பு திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி திருவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னதாக, மின்னொலியால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித சூசையப்பா் சொரூபம் வைக்கப்பட்டு, ஏ.ஆா்.மங்கலம் பங்குத்தந்தை அன்பரசு, ஆா்.எஸ். மங்கலம் உதவி பங்கு தந்தை கிளின்டன் ஆகியோா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சப்பர பவனி தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை அடைந்தது.
இதில் ஏ.ஆா். மங்களம், குமுழியேந்தல், வாகைக்குடி, கற்களத்தூா், சூரம்புலி, குலநாத்தி, அழியாதன்மொழி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த திரளான கிறிஸ்துவா்கள் கலந்து கொண்டனா். பின்னா், அன்னதானம் நடைபெற்றது.


தொடர்புடையது

பனங்குளம் அன்னை ஆலயத்தில் தோ் பவனி

ஆலங்கிணறு புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா

கொடைக்கானல் மாரியம்மன் கோயில் திருவிழா: மின் அலங்கார சப்பர பவனி

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய திருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

