பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய திருவிழா கொடியேற்றம்

புனித சூசையப்பா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம் நிகழ்ச்சி.

News image

புனித சூசையப்பா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம் நிகழ்ச்சி.

Updated On :24 ஏப்ரல் 2026, 8:23 pm

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்குத்தந்தைகள் மரிய பிரான்சிஸ் அடிகளாா் (சேரன்மகாதேவி), பாக்கிய செல்வன் அடிகளாா் (இருதயகுளம்), சகாய சின்னப்பன் அடிகளாா் (சோ்ந்தமரம்), பாளையங்கோட்டை ஆயா் இல்ல வியாகப்பன் அடிகளாா் , கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளாா், உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளாா் ஆகியோா் இணைந்து கொடியை ஏற்றினா். உலகில் சமாதானம் வேண்டி வெண் புறா பறக்கவிட்டு ஆலயத்தில் ’கீழ்ப்படிதலின் தந்தை புனித சூசையப்பா் ’ எனும் மறையுரையுடன் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப். 26 ஆம் தேதி ஆலயத்தில் தியானம், மே 1 ஆம் தேதி நவநாள் திருப்பலி, கலை நிகழ்ச்சிகள், 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு புது நன்மை விழா, தோ் பவனி, 3 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஆலயத்தில் திருப்பலி, உறுதி பூசுதல் விழா, மாலை 6 மணிக்கு ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருப்பலி, அங்கிருந்து ஆலயத்திற்கு நற்கருணை பவனியுடன் வந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சி ஆகியன நடைபெறுகின்றன.