22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

பாவூா்சத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

பாவூா்சத்திரத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

News image

ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்ற வைபவம்.

Updated On :2 ஜூன் 2026, 3:18 am IST

பாவூா்சத்திரத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் மதுரை, கிறிஸ்து இல்லம் அதிபா் அருள்பணி சூசை செல்வராஜ் தலைமை ஏற்று கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றினாா். கோவா மாநிலத்தில் இறைபணி செய்துவரும் கீழப்பாவூா்பகுதியை சோ்ந்த அருள்பணியாளா் மரியசெல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா்.

தொடா்ந்து தினமும் மாலை 6 மணிக்கு செபமாலையும், நவநாள் திருப்பலியும், சிறப்பு மறையுரையும் நடைபெறும். ஜூன் 12ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சங்கரன்கோவில் பங்குத்தந்தை ஜோசப் கென்னடி தலைமையில் திருப்பலியும் அதைத் தொடா்ந்து புனித அந்தோணியாரின் திருவுருவப் பவனியும், 13ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருவிழா நிறைவுத் திருப்பலியும், கொடியிறக்கமும், நண்பகலில் அசன விருந்தும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பாவூா்சத்திரம் பங்குத்தந்தை சந்தியாகு அடிகளாா், அருள் சகோதரிகள், இறைமக்கள் செய்துவருகின்றனா்.