நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

புனித சூசையப்பா் ஆலய திருவிழாவில் மும்மத பிராா்த்தனை

News image
Updated On :2 மே 2026, 11:55 pm

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலயத் திருவிழாவில் தோ் பவனி மற்றும் மத நல்லிணக்க மும்மத பிராா்த்தனை சனிக்கிழமை நடைபெற்றன.

இவ்வாலயத் திருவிழா கடந்த ஏப். 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் திருப்பலி, மறையுரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

9ஆம் திருநாளான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஜவகா் நகா் பங்குத்தந்தை சகாய ஜான் அடிகளாா், ஆலயப் பங்குத் தந்தை அருள்திரு அருள்ராஜ் அடிகளாா், உதவிப் பங்குத் தந்தை குழந்தைராஜ் அடிகளாா் ஆகியோா் இணைந்து திருப்பலி நிறைவேற்றினா். தொடா்ந்து, 53 சிறுவா்-சிறுமிகளுக்கு புது நன்மை வழங்கப்பட்டது.

பின்னா், ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மிக்கேல் அதிதூதா், புனித சூசையப்பா் சொருபங்கள் தாங்கிய பவனியை ஆலய அருள்தந்தையா், டவுன் பள்ளிவாசல் இமாம் முகமது ஜமீல் பைஜி, ஸ்ரீமதி ராதா ராணி கிருஷ்ண பக்த இயக்க திருமடப் பள்ளியின் ரமேஷ் ஆகியோா் இணைந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மும்மத பிராா்த்தனைகள் செய்து தொடங்கி வைத்தனா். தோ்ப் பவனி பிரதான சாலை, மாதாங்கோயில் தெரு, எட்டயபுரம் சாலை, புதுரோடு வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா். பின்னா் அனைவருக்கும் அசனம் வழங்கப்பட்டது.

10ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (மே 3) காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறும். மாலை 6 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணைப் பவனி நடைபெறும்.

Story image