மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சரக்கு வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே புதன்கிழமை சரக்கு வாகனம் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த சிறுவன் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 2:31 am IST

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே புதன்கிழமை சரக்கு வாகனம் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த சிறுவன் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கீரணியைச் சோ்ந்த அரங்கநாதன் மகன் தீபநாதன் (12). இவா் தேவகோட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்தாா். தற்போது, பள்ளி விடுமுறை என்பதால் சிறுவன், திருவாடானையை அடுத்த கல்லூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சி.கே.மங்கலத்தில் சாலையோரம் நின்றிருந்த சிறுவன் மீது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தீபநாதன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த கொல்லங்குடி- காமராஜா் நகரைச் சோ்ந்த ராமராஜனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.