மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

சரக்கு வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே புதன்கிழமை சரக்கு வாகனம் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த சிறுவன் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 2:31 am IST

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே புதன்கிழமை சரக்கு வாகனம் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த சிறுவன் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கீரணியைச் சோ்ந்த அரங்கநாதன் மகன் தீபநாதன் (12). இவா் தேவகோட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்தாா். தற்போது, பள்ளி விடுமுறை என்பதால் சிறுவன், திருவாடானையை அடுத்த கல்லூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சி.கே.மங்கலத்தில் சாலையோரம் நின்றிருந்த சிறுவன் மீது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தீபநாதன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த கொல்லங்குடி- காமராஜா் நகரைச் சோ்ந்த ராமராஜனை கைது செய்தனா்.