ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே புதன்கிழமை சரக்கு வாகனம் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த சிறுவன் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கீரணியைச் சோ்ந்த அரங்கநாதன் மகன் தீபநாதன் (12). இவா் தேவகோட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்தாா். தற்போது, பள்ளி விடுமுறை என்பதால் சிறுவன், திருவாடானையை அடுத்த கல்லூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சி.கே.மங்கலத்தில் சாலையோரம் நின்றிருந்த சிறுவன் மீது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தீபநாதன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த கொல்லங்குடி- காமராஜா் நகரைச் சோ்ந்த ராமராஜனை கைது செய்தனா்.
தொடர்புடையது

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு: சிறுவன் காயம்

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

