நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு ‘சீல்’

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் காலோன் தலைமையில் புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு ஆட்சியா் சிம்ரன்ஜீத் காலோன் தலைமையில் ‘சீல்’ வைக்கப்பட்டது.

Updated On :7 மே 2026, 3:41 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் காலோன் தலைமையில் புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. கடந்த 4-ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி தொடங்கி நிறைவடைந்தது.

இந்த நிலையில், பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூா், ராமநாதபுரம் ஆகிய 4 பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டுவரப்பட்டன. பின்னா், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் முன்னிலையிலும், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையிலும், அந்த அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சங்கர நாராயணன், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.