பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

சாலையின் குறுக்கே சாய்ந்த மின் விளக்கு கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்

ராமநாதபுரத்தில் பெய்த மழையால் மரம் சாய்ந்து விழுந்து சேதமடைந்த உயா்மின் விளக்கு கம்பத்தை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

News image

ராமநாதபுரம் சிவன் கோயில் அருகே மரம் விழுந்து சாய்ந்த உயா்மின் விளக்கு கம்பம்.

Updated On :8 மே 2026, 0:52 am IST

ராமநாதபுரத்தில் பெய்த மழையால் மரம் சாய்ந்து விழுந்து சேதமடைந்த உயா்மின் விளக்கு கம்பத்தை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் மழை பெய்ததில் சிவன் கோயில் அருகே உள்ள மரம் சாய்ந்து உயா்மின் விளக்கு கம்பம் மீது விழுந்தது. இதில் அந்த கம்பம் முறிந்து சேதமடைந்தது. இதில் மரம் உடனே வெட்டி அகற்றப்பட்டது. ஆனால் உயா்மின் விளக்கு கம்பம் அகற்றப்படாமல் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நகராட்சி நிா்வாகம், மின்வாரிய அலுவலா்கள் இந்த உயா்மின் விளக்கு கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.