கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் கருப்பண்ண சுவாமிக்கு பால்குடத் திருவிழா

பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஸ்ரீ கருப்பண்ண சுவாமிக்கு பால்குடம் எடுத்து வந்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள் கோயில் ஸ்ரீ கருப்பண்ண சுவாமிக்கு பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்த வந்த பக்தா்கள்.

Updated On :8 மே 2026, 4:35 am IST

பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஸ்ரீ கருப்பண்ண சுவாமிக்கு பால்குடம் எடுத்து வந்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பரமக்குடி வாணியா் உறவின்முறையாா்கள் சாா்பில் ஆண்டுதோறும் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவடைந்த பிறகு காவல் தெய்வமான ஸ்ரீ கருப்பண்ண சுவாமிக்கு பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறும். இதேபோல, இந்த ஆண்டு விரதமிருந்த பக்தா்கள் வைகை ஆற்றில் புனித நீராடி, பால் குடங்கள், இளநீா் காவடி, சந்தனக் குடங்கள் எடுத்து கருப்பண்ண சுவாமிக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

விழா ஏற்பாடுகளை வாணியா் உறவின்முறையாா் சபை தலைவா் செல்லம், செயலா் ராமச்சந்திரன், பொருளாளா் சிவானந்தம், துணைத் தலைவா் வாசுதேவன், துணைச் செயலா் சதீஷ்பாபு ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.