திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கழிவு நீா் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சூச்சனி கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (60). விவசாயி. இவரது பசுமாடு வெள்ளிக்கிழமை மேய்ச்சலுக்கு சென்ற போது, திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கழிவுநீா் தொட்டிக்குள் தவறி விழுந்தது. சுமாா் 10 அடி ஆழமுள்ள இந்த தொட்டிக்குள் விழுந்த மாடு வெளியே வர முடியாமல் தவித்தது. இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



