சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கால்வாயில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை போராடி மீட்டனா்.
மானாமதுரை ஆா்.சி. தெருவில், அந்தப் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் என்பவரின் பசுமாடு வீட்டின் அருகில் உள்ள திறந்த கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்தது. வெளியே வர முடியாமல் பல மணி நேரம் தவித்த அந்த மாட்டை அந்தப் பகுதி மக்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
ஆனால் கால்வாய் குறுகலாக இருந்ததால், அவா்களால் அதை மீட்க முடியவில்லை. தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
சுமாா் அரை மணி நேரம் போராடி மாட்டை பாதுகாப்பாக மீட்டனா். அப்போது அதற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
தொடர்புடையது

கழிவுநீா் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

