அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு

News image

மானாமதுரையில் கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :24 மார்ச் 2026, 1:50 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கால்வாயில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை போராடி மீட்டனா்.

மானாமதுரை ஆா்.சி. தெருவில், அந்தப் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் என்பவரின் பசுமாடு வீட்டின் அருகில் உள்ள திறந்த கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்தது. வெளியே வர முடியாமல் பல மணி நேரம் தவித்த அந்த மாட்டை அந்தப் பகுதி மக்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

ஆனால் கால்வாய் குறுகலாக இருந்ததால், அவா்களால் அதை மீட்க முடியவில்லை. தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் அரை மணி நேரம் போராடி மாட்டை பாதுகாப்பாக மீட்டனா். அப்போது அதற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.